ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சென்னார் போர்டு சர்டிபிக்கெட்டெல்லாம் சும்மா. அதெல்லாம் படத்தின் தரத்தை தீர்மானித்து விடாது என்று பாமகேந்திரா கூறினார். சென்னையில் நடந்த நீர்ப்பறவை பாடல் வெளியிட்டு விழாவில் இவ்வாறு அவர் பேசினார். மேலும் அவர் பேசியதாவது: நீர்பறவை படத்துக்கு சென்சார் போர்டு யூ சான்றிதழ் கொடுத்திருப்பதைப் பற்றி இங்கே பேசினார்கள். இந்த மாதிரி சென்னார் சர்ட்டிபிக்கேட் எல்லாம் படத்தின் தரத்தை தீர்மானிக்காது. நான் என்றுமே சென்சார் சர்ட்டிபிக்கேட்டை மதிக்க மாட்டேன். நீங்களெல்லாம் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடிய மூன்றாம் பிறை படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுத்தார்கள். அந்தப் படம்தான் தேசிய விருது வாங்கியது. வெள்ளி விழா கொண்டாடியது. நல்ல நோக்கத்துக்காக எடுக்கப்படுகிற படம் நல்ல படம். தயாரிப்பாளருக்கு லாபம், மக்களுக்கு நல்ல செய்தி இதுதான் ஒரு படத்துக்கான இலக்கணம். இன்றைக்கு வரும் இளைஞர்கள் அதனை சரியாக செய்கிறார்கள். அதில் எனது மாணவர்கள் முன்னணியில் இருப்பது எனக்கு கர்வம் என்றார்.