கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
விக்ரம் நடிப்பில் தாண்டவம் படத்தை இயக்கிய ஏ.எல்.விஜய் அடுத்து விஜய்யை நாயகனாகக்கொண்டு தனது அடுத்த படத்தை இயக்குகிறார். தற்போது விஜய் துப்பாக்கி படத்தின் வேலைகளில் தீவிரமாக இருக்க, ஏ.எல்.விஜய்யோ, விஜய் நடிக்கும் புதிய படத்தின் கதை விவாதம், பாடல் கம்போசிங் என்று களத்தில் இறங்கியுள்ளார்.
இந்தநிலையில், ஏற்கனவே விஜய்க்காக நீங்கள் பதிவு செய்து வைத்திருக்கும் தலைவன் என்ற பெயரில் ஒரு படம் தற்போது தயாராகி வருகிறதே? நீங்கள் அதே தலைப்பைத்தான் விஜய் படத்துக்கு வைக்கப்போகிறீர்களா? இல்லை வேறு தலைப்பு யோசிக்கிறீர்களா? என்று கேட்டபோது, தலைவன் என்ற தலைப்புதான் எனது கதைக்கு பொருத்தமாக இருக்கும். அதனால் அந்த தலைப்பை சேம்பரில் பதிவு செய்து வைத்திருக்கிறேன். ஆனால் தற்போது இன்னொரு படமும் அதே தலைப்பில் உருவாகி வருகிறது. அதனால் எதற்கு பிரச்சினை என்று நான் வேறு தலைப்பை வைக்க முடிவு செய்திருக்கிறேன் என்கிறார்
ஏ.எல்.விஜய். ஏற்கனவே தெய்வத்திருமகன் படத்தின் தலைபபு பிரச்சினை. அடுத்து தாண்டவம் கதை பிரச்சினை என்று பல சர்ச்சைகளுக்கு உள்ளானதால், மீண்டும் இன்னொரு சர்ச்சை வேண்டாமே என்று அவர் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.