ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விக்ரம் நடிப்பில் தாண்டவம் படத்தை இயக்கிய ஏ.எல்.விஜய் அடுத்து விஜய்யை நாயகனாகக்கொண்டு தனது அடுத்த படத்தை இயக்குகிறார். தற்போது விஜய் துப்பாக்கி படத்தின் வேலைகளில் தீவிரமாக இருக்க, ஏ.எல்.விஜய்யோ, விஜய் நடிக்கும் புதிய படத்தின் கதை விவாதம், பாடல் கம்போசிங் என்று களத்தில் இறங்கியுள்ளார்.
இந்தநிலையில், ஏற்கனவே விஜய்க்காக நீங்கள் பதிவு செய்து வைத்திருக்கும் தலைவன் என்ற பெயரில் ஒரு படம் தற்போது தயாராகி வருகிறதே? நீங்கள் அதே தலைப்பைத்தான் விஜய் படத்துக்கு வைக்கப்போகிறீர்களா? இல்லை வேறு தலைப்பு யோசிக்கிறீர்களா? என்று கேட்டபோது, தலைவன் என்ற தலைப்புதான் எனது கதைக்கு பொருத்தமாக இருக்கும். அதனால் அந்த தலைப்பை சேம்பரில் பதிவு செய்து வைத்திருக்கிறேன். ஆனால் தற்போது இன்னொரு படமும் அதே தலைப்பில் உருவாகி வருகிறது. அதனால் எதற்கு பிரச்சினை என்று நான் வேறு தலைப்பை வைக்க முடிவு செய்திருக்கிறேன் என்கிறார்
ஏ.எல்.விஜய். ஏற்கனவே தெய்வத்திருமகன் படத்தின் தலைபபு பிரச்சினை. அடுத்து தாண்டவம் கதை பிரச்சினை என்று பல சர்ச்சைகளுக்கு உள்ளானதால், மீண்டும் இன்னொரு சர்ச்சை வேண்டாமே என்று அவர் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.