ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சசி இயக்கிய பூ படத்தில் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக நடித்தவர் கேரள வரவு பார்வதி. அந்த படத்தில் சிறப்பாக நடித்திருந்தபோதும் அதையடுத்து தமிழில் அவருக்கு படவாய்பபுகள் இல்லை. அதனால் மீண்டும் தாய்மொழிக்கே சென்று கலைச்சேவையாற்றி வந்த பார்வதி, சில மலையாளப்படங்களில் நடித்துக்கொண்டே உதவி இயக்குனராகவும் பயிற்சி எடுத்திருக்கிறார். அதையடுத்து டைரக்ட்டு பண்ணுவதற்காக சில கதைகளையும் ரெடி பண்ணி வைத்திருக்கிறாராம்.
இந்த சமயத்தில்தான் மரியான் படத்தில் தனுசுடன் நடிப்பதற்காக அவரை ஒப்பந்தம் செய்து வந்திருக்கிறார் பரத்பாலா. கதை சொல்லும்போதே பலவிதமான கேள்விகள் கேட்டு அவரை உண்டு இலலை என்று ஆக்கிய பார்வதி, இப்போது தன்னை படங்களுக்கு கமிட் பண்ண வரும் மற்ற இயக்குனர்களிடமும் எடக்குமடககாக கேள்வி கேட்கிறாராம். அதோடு, நானும் எதிர்காலத்தில் டைரக்டராகப் போகிறேன். அதனால் என்னை நடிகையாக மட்டுமே நினைக்காம ஒரு டைரக்டராய் கதை சம்பந்தமாக நான் கேட்கிற கேள்விகளுக்கு சரியான விளக்கம் கொடுங்கள். அப்போதுதான் உங்கள் படத்தில் நான் நடிப்பதா? வேண்டாமா? என முடிவெடுக்க முடியும் என்று சொல்கிறாராம் பார்வதி. அம்மணியின் இந்த அதிர்வேட்டு கேள்விகளைக்கேட்டு சில புதுமுக இயக்குனர்கள் துண்டக்காணோம், துணியக்காணோம் என்று தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.