சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
நயன்தாராவை பிரிந்த பின், பிரபுதேவாவிடம் ரொம்பவும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போது, தன் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிடுவதுடன், சினிமாவிலும், முழு கவனம் செலுத்துகிறார். அவர் தற்போது, மூன்று இந்திப் படங்களை இயக்குகிறார். இதற்காக, மும்பையிலேயே, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை பார்த்து, அங்கேயே குடியேறி விட்டார் பிரபுதேவா. "இனி, மும்பை தான் உங்களின் முகவரியா? என, அவரிடம் கேட்டபோது, "இந்திப் படம் எடுப்பது, எனக்கு ரொம்பவும் பிடித்துள்ளது. காரணம், நிறைய பணம் முதலீடு செய்து, பிரமாண்டமாக படம் தயாரிக்கின்றனர். அத்துடன், குறிப்பிட்ட தேதியில், படத்தை, "ரிலீஸ் செய்கின்றனர். மூன்று பட வேலைகள் உள்ளதால், தற்காலிகமாக மும்பையில் வீடு எடுத்துள்ளேன். சென்னை தான், என் நிரந்தர முகவரி என்கிறார் பிரபுதேவா.