மீண்டும் சிவகார்த்திகேயனிடம் கதை சொன்ன ஏ.ஆர்.முருகதாஸ் | பைசன் படத்தின் 2வது பாடல் வெளியானது | ‛யாத்திசை' இயக்குனருடன் இணையும் ரவி மோகன் | பிளாஷ்பேக்: பாலுமகேந்திரா ஓவியமாய் தீட்டிய முதல் திரைக்காவியம் “கோகிலா” | அக். 10ல் ஒளிபரப்பாகும் ‛வேடுவன்' வெப் தொடர் | மதராஸி ஓடிடி வெளியீடு எப்போது | சிம்புதேவன் இயக்கத்தில் விமல்? | 21 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் ஆகும் அட்டகாசம் | ‛சூர்யா 46' படத்தின் ஓடிடி உரிமம் இத்தனை கோடியா? | வேறொருவரை வைத்து தெலுங்கு டப்பிங்: 'கிஸ்' இயக்குனர் மீது விடிவி கணேஷ் அதிருப்தி |
தெலுங்கு நடிகர் ராணாவும், த்ரிஷாவும் அடுத்த ஆண்டில் திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் என்பது செய்தியாக இருந்தபோதும், இதுவரை அது சம்பந்தமான கேள்விகளுக்கு உரிய பதில் எதுவும் அளிக்கவில்லை த்ரிஷா. ஆனால் அடுத்தடுத்து புதிய படங்களில் அவர் கமிட்டாகாமல் இருந்து வருகிறார்.
இந்த நிலையில்,சமீபத்தில் சில சினிமா நண்பர்களே த்ரிஷாவை அணுகி, ராணாவுடன் இணைத்து செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கிறதே. உங்களுக்கு என்னதான் கதை நடக்கிறது என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு, ராணா எனது நண்பர் அவ்வளவுதான். மற்றபடி இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொள்வது உண்டு. ஆனால் மீடியாக்கள்தான் நாங்கள் திருமணம் செய்து கொள்ளயிருப்பதாக வதந்தி பரப்பி விட்டு வருகின்றன. ஆனால் அதற்காக நான் எனனை மாற்றிக்கொள்ளப்போவதில்லை. இப்போதும் ராணாவை சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறேன். இந்த சந்திப்பை எந்த செய்திகளும் எதுவும் செய்துவிட முடியாது. நல்ல நட்பை யாரும் எதுவும் செய்து விடமுடியாது என்றும் தில்லாக பேசுகிறார் த்ரிஷா.