ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ராட்டினம், மன்னாரு படங்களில் நடித்த ஸ்வாதி, தற்போது லவ்டுடே பாலசேகரன் இயக்கும் ஒருவர் மீது இருவர் சாய்ந்து என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திலும் அவருக்கு ஜோடி ராட்டினம் படநாயகனான லகுபரன்தான். ஏறகனவே பழக்கப்பட்ட நடிகர் என்பதால் ராட்டினம் படத்தில் நடித்ததை விட இப்படத்தில் இன்னும் நெருக்கமாக நடித்து வருகிறார் அவர்.
இந்நிலையில், ஒருவர் மீது இருவர் சாய்ந்து படத்தின் ஸ்பாட்டுக்கு சொன்னபடி வராமல் பல நாட்களாக அவர் டேக்கா கொடுத்து வருவதாகவும், அதனால் பல நாட்களில் படப்பிடிப்பு பேக்அப் ஆனதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால் இதுபற்றி ஸ்வாதியைக்கேட்டால், நான் ஸ்பாட்டுக்கு சொன்னபடி போகாதது உண்மைதான். ஆனால் வேண்டுமென்றே அப்படி செய்யவில்லை. சிலநாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன். மருத்துவமனையில் பரிசோதித்தபோது மஞ்சகாமாலை நோய் இருப்பது தெரிந்தது. அதனால் இயக்குனர் பாலசேகரனிடம் இதுபற்றி தெரிவித்து விட்டு, இரண்டு வாரங்களாக சிகிச்சை பெற்றேன். அதையடுத்து இப்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறேன்.ஆனால் நான் வேண்டுமென்றே படப்பிடிப்புக்கு செல்லாமல் இழுத்தடித்து வருவதாக என்னைப்பற்றி தவறான செய்திகள் பரவி விட்டது. இதை இப்படியே விட்டால் என்னைப்பற்றி கால்சீட் சொதப்பல் நடிகை என்ற முத்திரை விழுந்து விடும் என்பதால், இப்போது எனது அபிமானிகளிடம் நடந்தது குறித்து விளக்கமளித்து வருகிறேன் என்கிறார் ஸ்வாதி.