மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
கோடம்பாக்கத்தை, ஒரு கலக்கு கலக்கிய காஜல் அகர்வாலின் பார்வை, தற்போது பாலிவுட் பக்கம் திரும்பியுள்ளது. அக்ஷய் குமாருக்கு ஜோடியாக, ஒரு படத்தில் நடித்து வருகிறார். "இனிமேல் பாலிவுட்டில் தான், முழு கவனத்தையும் செலுத்த போகிறீர்களாஎன்ற கேள்விக்கு, "அப்படியெல்லாம் இல்லை. அனைத்து மொழி படங்களிலும் நடிக்க வேண்டும் என்பதே, என் விருப்பம். எம்.பி.ஏ., படிக்க வேண்டும் என, நினைத்தேன். ஆனால், திரையுலகம், என் வாழ்க்கையை திசை திருப்பி விட்டது. என்னை கட்டிக்க போகிறவர், எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து, ஒரு சிறிய பார்முலாவை உருவாக்கியுள்ளேன். எனக்கு கணவராக போகிறவருக்கு, கோபமே வரக் கூடாது. எப்போதும், சிரித்து சிரித்து பேசிக் கொண்டே இருக்க வேண்டும். அழகாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், கண்டிப்பாக, உயரமானவராக இருக்க வேண்டும்என, தன் எதிர்கால வாழ்க்கை துணைக்கு, நிபந்தனைகளை பட்டியலிடுகிறார், காஜல்.