‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நாடகத்தில் நடிக்க இருக்கிறார் மாஜி ஹீரோயின் லட்சுமி. இதுபற்றி அவர் கூறியதாவது: ஒய்.ஜி. பார்த்தசாரதி தொடங்கிய யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ் அமைப்பில் எனது அம்மா ருக்மணியும், நானும் உறுப்பினர்களாக இருந்தோம். எனது அம்மா ஒய்,ஜி.பார்த்தசாரதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். நான் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு ஜோடியாக நாடகங்களில் நடித்திருக்கிறேன். சினிமாவுக்கு சென்ற பிறகு நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு இல்லை. அதன் பிறகு குடும்பம் பொறுப்பு என்று வந்துவிட்டதால் நாடகம் பக்கம் போகமுடிவில்லை. இனி நாடகங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறேன்.
ஒரு நடிகையின் திறமையை நிர்ணயிப்பது நாடகங்கள் தான். சினிமாவில் நிறைய டேக் போகலாம், குளோஸ்-அப் வைக்கலாம், இப்படி எந்த வசதியும் இல்லாமல் நாடகத்தில் நடித்து கைதட்டல் வாங்கும்போது சந்தோஷமாக இருக்கும். இப்போது வரும் நடிகைகளுக்கு தமிழே பேசத் தெரியவில்லை பிறகு எப்படி நடிப்பார்கள். அவர்களுக்கு எல்லா வசதியும் சில படங்களிலேயே கிடைத்து விடுவதால் அவர்களுக்கு நடிப்பு பற்றி அக்கறை இல்லை. வந்தோமா வந்த வேகத்தில் சம்பாதித்தோமா என்றுதான் யோசிக்கிறார்கள். என்றார்.