ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
எத்தனை மொழி படத்தில் நடித்தாலும் தமிழுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பேன் என்று எமி ஜாக்சன் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் -கூறியதாவது, தமிழில நான் நடித்த தாண்டவம் வெளிவரப்போகிறது. இதில் நான் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்திருப்பது பற்றி கேட்கிறார்கள். அனுஷ்கா என்னைவிட ரொம்பவே சீனியர் அவருடன் நடிப்பதை பெருமையாக நினைக்கிறேன். மதராசபட்டினத்தில் ரொம்ப அமைதியான, அடக்கமான பெண்ணாக நடித்தேன். இதில் அதற்கு நேர் எதிர்மாறான சுறுசுறுப்பான கேரக்டர். காதல் என்ற பெயரில் விக்ரமை டார்ச்சர் செய்வதுதான் என் வேலை. அடுத்து ஷங்கரின் ஐ படம் எனக்கு முக்கிய திருப்புமுனை படமாக இருக்கும், தெலுங்கு, இந்தியில் நடித்தாலும் என் கவனமும், முக்கியத்துவமும் தமிழின் மீதுதான் இருக்கும். இதற்காகவே தமிழ் கற்று வருகிறேன்.
என்னைப் பற்றி நிறையவே தவறான செய்திகள் வருவது பற்றி எனக்குத் தெரியும். ஆனால் அதைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படுவதில்லை. நான் எனது நடிப்பிலேயே குறியாக இருக்கிறேன். ஒரு நேரத்தில் வரும் செய்தி இன்னொரு புதிய செய்தி வரும்போது மறைந்து விடும். அதையே நினைத்துக் கொண்டிருந்தால் நாம் நினைத்ததை சாதிக்க முடியாது. என்றார்.