ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
யமுனா என்ற பெயரில் உருவாகும் புதிய படத்தில் இளம் ஜோடிகள் சுடுகாட்டில் தங்களது முதலிரவை கொண்டாடுவது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீஹரி பாலாஜி மூவிஸ் தயாரிக்கும் படம் யமுனா. இந்த படத்தில் புதுமுகங்கள் சத்யா - ஸ்ரீரம்யா கதாநாயகன் - கதாநாயகியாக நடிக்க, இலக்கியன் என்ற புது இசையமைப்பாளர் அறிமுகம் ஆகிறார். டைரக்டர் கணேஷ்பாபு இயக்குகிறார்.
படத்தின் கதைப்படி, உயிருக்கு உயிராக காதலித்த காதலர்கள் பெற்றோர்களால் நிராகரிக்கப்பட்டதால், யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணத்தை ஏற்றுக்கொள்ளாத இருதரப்பு உறவுகளும் கொலைவெறியுடன் அவர்களை துரத்துகின்றன. ஓடி ஒளிய ஊருக்குள் இடம் இல்லாமல், காதல் ஜோடி சுடுகாட்டுக்குள் பதுங்குகிறார்கள். சிதையில் பிணம் ஒன்று எரிந்து கொண்டிருக்கிறது. அந்த இடத்திலேயே புது மணமக்கள் தங்கள் முதல் இரவை கொண்டாடுகிறார்கள். இந்த சூழலில் கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரியும் ஒன்று இடம்பெறுகிறது.