ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
முருகா படத்தில் அறிமுகமானவர் அசோக். துடிப்பு மிக்க தஞ்சாவூர் இளைஞர். வளர்ந்தது, படித்தது மும்பையில். படித்துக் கொண்டிருந்தபோது தொலைக்காட்சி தொடர்கள், இந்தி சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். தூர்தர்ஷனின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும் பெற்றார். மேல்படிப்புக்காக அமெரிக்கா சென்ற அசோக், அங்கு மேற்கத்திய நடனங்களையும், பரதநாட்டியத்தையும் கற்றார். பல்வேறு நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். மீண்டும் மும்பை திரும்பியவர், கிஷோர் நமித் கவுர் நடிப்பு பயிற்சி மையத்தில் சேர்ந்து நடிப்பு பயிற்சி பெற்றார். இப்படியாக சினிமாவுக்கான அத்தனை தகுதிகளையும் வளர்த்துக்கொண்டு சென்னை வந்து வாய்ப்பு தேடியதில் முருகா படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அசோக்கின் துரதிர்ஷ்டம் அந்தப் படம் வெற்றிபெறவில்லை. அதன் பிறகு பிடிச்சிருக்கு என்ற படத்தில் நடித்தார். அதிக செலவில் எடுக்கப்பட்ட அந்தப் படமும் பெரிதாக போகவில்லை. தகுதி இருந்தும் சரியான பின்புலம் இல்லாத அசோக்கால் சினிமாவில் அத்தனை எளிதில் சாதிக்க முடியவில்லை. வானம் பார்த்த சீமையிலே என்ற படத்தில் நடித்தார். அந்தப் படம் முடிந்தும் வெளிவராமல் நின்று விட்டது. இதனாலும் மனதொடிந்து போகாமல் தினமும் ஏதாவது ஒரு கம்பெனிக்கு சென்று வாய்ப்பு கேட்டு வந்தார்.
அசோக்கின் பணிவு, திறமையை பார்த்து அவருக்கு சிலர் வாய்ப்பு கொடுத்தனர். இப்போது அவர் கோழிகூவுது, வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய், காதல் கள்வன், ஐந்தாம் வேதம், காஞ்சிபுரம் சந்திப்பு, லைலா மஜ்னு, படங்களில் நடித்து வருகிறார். "விக்ரம் சார்...பத்து வருட போராட்டத்துக்கு பிறகுதான் பெரிய இடத்துக்கு வந்தார். அவருக்கு சேது அமைந்த மாதி இப்போது நான் நடித்துக் கொண்டிருக்கும் 6 படங்களில் ஏதாவது ஒன்றாவது கட்டாயம் அமையும்னு நம்புறேன். நம்பிக்கைதான் வாழ்க்கை. எல்லா படத்துக்கும் என்னோட முழு உழைப்பையும் கொடுக்கிறேன். நிச்சயம் ஒருநாள் ஜெயிப்பேன். வலியில்லாமல் எதுவுமே கிடைக்காது. இப்போது நான் வலியுடன் இருக்கிறேன். நாளை அதன் பலனை அனுபவிப்பேன்" என்கிறார் அசோக்.