இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
"கலக்கல் கபடி கே.பி.எல்., என்ற பெயரில், மிழகம் முழுவதும் உள்ள பெண்களை திரட்டி நடத்தப்படும் கபடி போட்டி நிகழ்ச்சி ஒன்று, ஜெயா "டிவியில், ஆகஸ்டு 15ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. 120 வாரங்கள் தொடரும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் வீராங்கனைகளை உற்சாகப்படுத்த, "அஞ்சாதே விஜயலட்சுமி, போட்டி நடந்த இடத்திற்கு சென்றிருந்தார். அப்போது சில வீராங்கனைகள், விஜயலட்சுமியையும் கபடி ஆட அழைக்க, வரிந்துக் கட்டி களமிறங்கியவர், தொடை தட்டியபடி, "கபடி கபடி என, தில்லாக எதிரணியினர் மீது பாய்ந்திருக்கிறார். ஆனால், எதிர்பாராதவிதமாக, அத்தனை பேரும் சேர்ந்து விஜயலட்சுமியை இழுத்து பிடித்து, குண்டுகட்டாக தூக்கி விட்டனர். "பெண்களும், ஆண்களுக்கு இணையான பலசாலிகள் என்பதை நிரூபிக்கும் நல்ல கலை கபடி விளையாட்டு, என, சொல்லும் விஜயலட்சுமி, தற்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம், தன் சென்னை தோழிகளுடன் கபடி விளையாடி, சந்தோஷமாக பொழுதை கழிப்பதாக சொல்கிறார்.