ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை குட்டி பத்மினி காஞ்சிபுரம் அருகே தனது மித்ராலயா அறக்கட்டளை மூலம் மோக்சா என்ற பெயரில் முதியோர் இல்லம் ஒன்று கட்டுகிறார். இதற்கு நிதி திரட்டுவதற்காக வருகிற 18ந் தேதி மாலை 6 மணிக்கு சென்னை காமராஜர் அரங்கில் மறைந்த இந்தி சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கண்ணா நினைவாக இசை நிகழ்ச்சி நடத்துகிறார். இதில் முகமது அஸ்லம், அனுராக் சேத் உள்ளிட்ட பிரபல இந்தி பின்னணி பாடகர்கள் ரா«ஷ் கண்ணாவின் திரைப்படங்களிலிருந்து பாடல்களை பாடுகிறார்கள். இதுகுறித்து குட்டி பத்மினி கூறியதாவது:
எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் நான் ஒரு தொலைக்காட்சி தொடர் நடித்தபோது அந்த தொடரில் நான் பிள்ளைகளால் கைவிடப்பட்ட ஒரு வயதான கேரக்டரில் நடித்தேன். அதன் படப்பிடிப்பு விஷ்ராந்தி இல்லத்தில் நடந்தது. அப்போதுதான் அங்கு முதியவர்கள் படும் வேதனை¬யும், அவர்களுக்கு அந்த இல்லத் தலைவி சாவித்ரி உழைப்பதையும் பார்த்தேன். அப்போதே நாமும் ஒரு முதியோர் இல்லம் கட்டி தொண்டு செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். என் வருமானத்தில் இருந்து பணம் சேர்த்து காஞ்சிபுரம் அருகில் 4 ஏக்கர் நிலம் வாங்கினேன். அந்த இடத்தில் இப்போது மோட்சா என்ற பெயரில் முதியோர் இல்லம் கட்ட முடிவு செய்திருக்கிறேன். முதல் கட்டமாக 500 முதியவர்களை பாதுகாக்கும் வகையில் கட்டிடம் கட்ட முடிவு செய்திருக்கிறேன். அதற்கு ஒரு கோடி ரூபாய் வேண்டும். அவ்வளவு தொகை என்னால் செலவு செய்ய முடியாது என்பதால் இந்த நிகழ்ச்சி மூலம் நிதி திரட்ட முடிவு செய்தேன். இது முற்றிலும் இலவசமாக செயல்படும் இல்லம். காஞ்சியில் இறந்தால் புண்ணியம் என்பது இந்துக்களின் நம்பிக்கை அதனால்தான் இங்கு கட்டுகிறேன். வாழ்க்கையின் கடைசி பகுதியில் சந்தோஷமாக தங்கள் வீட்டில் இருப்பது போன்ற உணர்வுடன் முதியவர்களை பாதுகாக்க முடிவு செய்திருக்கிறேன். அதற்கான மருத்துவ வசதிகளையும் செய்யப்போகிறேன். இன்னும் ஒரு சில ஆண்டுகளில் நானும் அந்த முதியோர் இல்லத்திலேயே குடியிருந்து அவர்களுக்கு சேவை செய்யப்போகிறேன். கடவுளின் கருணை இருந்தால் 500 பேர் என்பது 5 ஆயிரம் பேர் என ஆகும். என்றார்