ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இன்றைய தேதியில் சினிமாவில் ரொம்ப பிஸியான பாடலாசிரியர் யார் என்றால் நிச்சயம் அது மதன் கார்கி தான். கம்ப்யூட்டர் இன்ஜினியரான கார்கி, "கண்டேன் காதலை" படம் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமான கார்கி, பின்னர் எந்திரன் படம் மூலம் பிரபலமானார். தொடர்ந்து தனக்கே உரிய பாணியில் புது சிந்தனைகளோடும், புதுப்புது வரிகளோடும் தமிழ் சினிமாவில் நம் அனைவரின் இதயத்தில் நிற்கிறார். கோ படத்தில் அவர் எழுதிய என்னமோ ஏதோ, ஏழாம் அறிவில் சீன மொழிப்பாடல், நண்பனில் அஸ்க் அஸ்க்... உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களிடம் வெகுவாக பாராட்டப்பட்டது. தற்போது நான் ஈ படத்தில் எல்லா பாடல்களையும் இவரே எழுதி ராஜமவுலியின் மொத்த பாராட்டையும் பெற்றுள்ளார். அந்த வேகம் குறைவதற்குள், இதோ அவரது வரிகளில் ஏகப்பட்ட படங்கள் வர இருக்கின்றன. அவற்றுள் துப்பாக்கி, மாற்றான், கடல், நிமிர்ந்து நில், முகமூடி, ஐ, ஒரே ஞாபகம் என்று கைவசம் வைத்திருக்கிறார். இதுதவிர நிறைய படங்களுக்கும் பாடல் வரிகள் எழுத கமிட் ஆகி இருக்கிறார். அமைதியின் உருவமாய், அழகான வரிகளின் உயரமாய் விளங்கும் மதன் கார்கி விரைவில் தனது 50வது பாடல் நெருங்குவார் எனத் தெரிகிறது.
வாழ்த்துக்கள் கவிஞரே...!