ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
1954-ல் மகாராஜபுரம் சந்தானத்தால் தொடங்கப்பட்டது பழமை வாய்ந்த ஸ்ரீகிருஷ்ண கான சபா. கிட்டத்தட்ட 60 வருடங்கள் பழமை வாய்ந்தது இந்த கட்டடம். இசை, நாட்டியம் ஆகிய துறைகளில் வளர்ந்து வரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் வண்ணம் தொடங்கப்பட்டு, அதன்படி பாரம்பரியமாக இங்கு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 1974-ல் பத்மா சுப்ரமணியனுக்கு முதன்முதலில் இந்த சபா தான் விருது வழங்கி சிறப்பித்தது. 1989-ல் முதன் முதலில் நடிகை ஷோபனாவின் நாட்டிய நிகழ்ச்சியும் இங்கு தான் நடைபெற்றது. அன்று முதல் ஷோபனாவிற்கும், கிருஷ்ண கான சபாவிற்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது.
இந்நிலையில் சபாவில் சில மாற்றங்கள் செய்து புதிய கட்டடம் கடட நிதி கோரி இருந்தனர் சபா குழுவினர். அதன்படி சபாவின் புதிய கட்டடத்திற்காக வருகிற கோகுல அஷ்டமி அன்று நடைபெறும் தனது கிருஷ்ணா நாட்டிய நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் நிதியை கட்டடத்தின் வளர்ச்சிக்காக கொடுக்க இருக்கிறார். ஷோபனாவின் இந்த முடிவு இயல் இசை நாடக கலைஞர்கள் மத்தியில் அவருக்கு நல்ல புகழை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறது.