இன்றைய ரசிகர்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு புத்திசாலிகளாக உள்ளனர் : யாமி கவுதம் | மிரட்டலின் பேரிலேயே ஜாய் உடன் திருமணம்: குழந்தையை கவனிக்க தயார்: மாதம்பட்டி ரங்கராஜ் | ஜிவி பிரகாஷ் 100வது படத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியீடு | தி ராஜா சாப் ரிலீஸ் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம் | கேரள மாநில விருது: மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மம்முட்டி | ஒரே நேரத்தில் திரிஷ்யம் 3 மூன்று மொழிகளில் ரிலீஸா? : தெளிவாக குழப்பும் ஜீத்து ஜோசப் | 100 கோடி வசூலிக்குமா 'பாகுபலி தி எபிக்' | விஷால் மீது 'மகுடம்' முன்னாள் இயக்குனர் ரவி அரசு புகார் | மணிரத்னம் படத்தில் நடிக்க ஆசைப்படும் துருவ் | அஜித்துக்கு வில்லனாக நடிக்கலாமா? யோசிக்கும் விஜய்சேதுபதி |
தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவாகி வரும் அம்மாவின் கைப்பேசி படத்தில் நாயகன் சாந்தனுவுக்கு, நாயகி இனியா முத்தம் கொடுப்பது போன்ற ஒரு காட்சி இடம்பெறுகிறது. இந்த காட்சியில் சாந்தனுவுக்கு முத்தம் கொடுத்த அனுபவம் பற்றி இனியா பேட்டியொன்றில் கூறியுள்ளார். அவர் தனது பேட்டியில், தங்கர்பச்சான் தேவையில்லாமல் முத்தக்காட்சியை வைக்க மாட்டார். கதைக்கும், காட்சிக்கும் அத்தியாவசியமாக இருந்ததால்தான் அந்த காட்சியை படமாக்கினார். படம் பார்க்கும்போது தெரியும். அதில் விரசம் இருக்காது. ஒரு அத்தை மகனை, மாமா மகள் எந்த அளவுக்கு நேசிக்கிறாள் என்பது அந்த காட்சியில் வெளிப்படும். அதனால்தான் துணிச்சலுடன் அந்த காட்சியில் நடித்தேன், என்று கூறியுள்ளார்.
இனியாவின் முத்தத்தை இன்முகத்துடன் பெற்ற சாந்தனு கூறுகையில், தங்கர்பச்சான் இயக்கத்தில் அம்மாவின் கைப்பேசி படத்தில் நடிப்பதில் பெருமைப்படுகிறேன். இந்த படத்துக்காக என்னிடம் உடல் எடையை குறைக்க சொன்னார். ஆறரை கிலோ உடல் எடையை குறைத்தேன். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு, அவருடைய வீட்டில் நடிப்பு பயிற்சி பெற்றேன். அவர் நடித்துக்காட்டியபடி, படத்தில் நடித்து வருகிறேன். அவர் சொன்னதை எல்லாம் செய்கிறேன். அப்படித்தான் இந்த முத்த காட்சியும். ஒரே டேக்கில் படமாக்கி விட்டார், என்றார்.