ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஏக் தா டைர் படப்பிடிப்பில் அரை குறை ஆடை அணிந்து கத்ரீனா கைப் கவர்ச்சியாக வந்ததால் அவரை சல்மான் கான் அடித்துவிட்டதாக கூறப்படுகிறது. பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகையர்களான சல்மானும், கத்ரீனாவும் ஒரு காதலத்தில் காதல் பறவைகளாய் வலம் வந்தனர். பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட மனகசப்பால் பிரிந்தனர். இந்நிலையில் தற்போது இருவரும் இணைந்து ஏக் தா டைர் எனும் படத்தில் நடித்து வருகின்றனர். ஷூட்டிங்போது கத்ரீனாவை, சல்மான் கான் அடித்துவிட்டதாக பிரபல சினிபிலிட்ஸ் மேகஸின் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த பத்திரிக்கையில் வெளியான செய்தி, ஏக் தா டைகர் படப்பிடிப்பில் ஒரு ஷாட்டிற்காக சல்மான் தயாராகி, கத்ரீனாவுக்காக காத்திருந்தாராம். அப்போது ரெடியாகி வந்த கத்ரீனா ரொம்ப கவர்ச்சியாக மெல்லிய ஆடை அணிந்து, உடம்பின் பெரும்பகுதி தெரியும் அளவுக்கு வந்துள்ளார். அவரை பார்த்த சல்மான், என்ன உடை இது, இப்படி கவர்ச்சியாய் வந்திருக்கிறாய் என்று திட்டியுள்ளார். அப்போது கத்ரீனா டைரக்டர் சொன்னதால் இப்படி உடையணிந்து வந்தேன் என்று கூறியுள்ளார். இப்படியே இருவரும் பேசி வந்தநிலையில் ஒரு கட்டத்தில் கத்ரீனாவை பளார் என்று சல்மான் அடித்துவிட்டார் என்று அந்த பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
இதனிடையே இந்த செய்தியை கத்ரீனாவின் நண்பர் ஒருவர் மறுத்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, முற்றிலும் தவறான இந்த செய்தி இது. அவர்கள் பிரிந்துவிட்டாலும் எந்தவித பகையும் இல்லாததால் ஏக்தா டைகர் படத்தில் சேர்ந்து நடித்து வருகின்றனர். கத்ரீனா மீது சல்மானுக்கு எப்போதும் அக்கறை இருக்கிறது என்று கூறியுள்ளார்.