Advertisement

சிறப்புச்செய்திகள்

பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்யின் துப்பாக்கி படத்தை வெளியிட இடைக்கால தடை!

28 ஜூன், 2012 - 09:18 IST
எழுத்தின் அளவு:

 நடிகர் விஜய்யின் துப்பாக்கி படத்தை வெளியிட சென்னை சிட்டி சிவில் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. சென்னை 2வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் நார்த் ஈஸ்ட் பிலிம் ஒர்க் நிறுவனம் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கள்ளத்துப்பாக்கி என்ற பெயரில் தமிழில் சினிமா படம் தயாரிக்க முடிவு செய்தோம். இதற்காக கள்ளத் துப்பாக்கி என்ற தலைப்பை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்தோம். கள்ளத்துப்பாக்கி படத்தை 2009ம் ஆண்டு முதல் தயாரித்து வருகிறேன். படத்தை இயக்குனர் லோகிதாஸ் என்பவர் இயக்கி வருகிறார். இந்த நிலையில் துப்பாக்கி என்ற பெயரில் கலைப்புலி தாணு படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தில், நடிகர் விஜய் நடித்துள்ளார். முருகதாஸ் இயக்குகிறார். இதுசம்பந்தமான விளம்பரம் பத்திரிகைகளில் வெளியானதை கண்டு அதிர்ச்சியடைந்தேன். தயாரிப்பாளர் கலைப்புலி தாணு விதிமுறைகளை மீறி, நான் பதிவு செய்த கள்ளத்துப்பாக்கி என்ற தலைப்பின் பின் பகுதியில் படத்தை தயாரித்து வருகிறார். எனவே துப்பாக்கி என்ற பெயரில் படத்தை வெளியிட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குனர் முருகதாஸ் ஆகியோருக்கு தடை விதிக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி திருமகள், மனுதாரர் கள்ளத்துப்பாக்கி என்ற தலைப்பில் படம் தயாரித்து விரைவில் வெளியிட உள்ளதாகவும், இந்த தலைப்பை 2009ம் ஆண்டு பதிவு செய்து, ஒவ்வொரு ஆண்டும் தலைப்பை புதுப்பித்து வருவதாகவும் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார். இப்போது துப்பாக்கி என்ற பெயரில் எதிர் மனுதாரர் தயாரிக்கும் படம் வெளியானால், தனக்கு இழப்பு ஏற்படும் என்றும், மனுதாரர் தரப்பில் வாதம் செய்யப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்பக்கட்ட முகாந்திரம் உள்ளதால், துப்பாக்கி என்ற தலைப்பில் படத்தை வெளியிட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குனர் முருகதாஸ் ஆகியோருக்கு ஜூலை 16ம்தேதி வரை இடைக்கால தடை விதிக்கப்படுகிறது, என்று உத்தரவிட்டார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in