ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
இனிது இனிது, தேநீர் விடுதி போன்ற படங்களில் நடித்தவர் நடிகை ரேஷ்மி. தமிழ் தவிர கன்னடத்திலும் சில படங்களில் நடித்து வருகிறார். இவர் இப்போது கன்னடத்தில் ஸ்வராஞ்சலி என்ற படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் தனக்கு தர வேண்டிய பாக்கி சம்பளத்தை தரமால் இழுத்தடிப்பதாகவும், கேட்டாமல் தகாத வார்த்தையால் திட்டுவதாகவும் புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து ரேஷ்மி கூறியுள்ளதாவது, ஸ்வராஞ்சலி என்ற கன்னட படத்திற்காக தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் என்னை அணுகினார். படத்திற்கு சம்பளமாக ரூ.4 லட்சம் தருவதாக சொன்னார். நானும் சம்மதித்து, படத்தில் நடித்தேன். படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. ஆனால், எனக்கு பேசியபடி சம்பளத்தை முழுவதுமாக தயாரிப்பாளர் தரவில்லை. அந்தபணத்தை நான் கேட்டபோது பணத்தையும் தரவில்லை மேலும் என்னை ரொம்ப கேவலமாக திட்டிவிட்டார். இதுகுறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளேன் என்றார்.