அடுத்தடுத்து இரண்டு 200 கோடி படங்கள் : கேக் வெட்டி கொண்டாடிய மோகன்லால் | கோவிந்தா பாடல்... சந்தானத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு : ரூ.100 கோடி நஷ்ட கேட்டு நோட்டீஸ் | கேரளாவில் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு : ரஜினியைப் பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் | மகன் படத்தில் பாடுவாரா விஜய்? | திரையுலகில் 50வது ஆண்டு: பாரதரத்னா விருது பெறுவாரா இளையராஜா? | இந்தியிலும் கலக்கும் ரெஜினா | கையில் கட்டு ஏன்? சண்டையா? வரலட்சுமி விளக்கம் | சூர்யா 46வது படத்தில் விஜய் தேவரகொண்டா? | நாங்கள் ஒரு நல்ல படம் தயாரித்துள்ளோம் : சூரஜ் பஞ்சோலி | '3 பிஎச்கே' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு! |
ஹாலிவுட் பாணியில் தயாராகி இருக்கும் விஸ்வரூபம் படத்தின் டிரைலர் மற்றும் படக்காட்சிகளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிங்கப்பூரில் நடந்து வரும் சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவில் வெளியிட்டார் நடிகர் கமல்ஹாசன். பயங்கரவாதமும், அதற்கு எதிரான போராட்டம்தான் படத்தின் கதை என்பது ட்ரைலரை பார்க்கும் போதே தெரிகிறது. அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் இதுவரை பார்த்திராத இடங்களில் காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். ஒன்றரை நிமிடம் ஓடும் இந்த ட்ரைலரில், படத்தின் பிரமாண்டம் தெரிகிறது. அதுமட்டுமல்ல படத்தில் கதக் டான்சராகவும் மிரட்டியுள்ளார் கமல்.
விஸ்வரூபம் படம் குறித்து சிங்கப்பூரில் கமல் கூறியதாவது, கடந்த 7 வருடங்களாக என மனதில் பதிந்திருந்த கதை தான் விஸ்வரூபம். அமெரிக்காவில் தனது மேற்படிப்பை முடிக்க நினைத்த ஒரு நடுத்தர வர்க்கத்து தமிழ்ப் பெண் நிருபமா, அங்குள்ள விஸ்வநாதனை திருமணம் செய்து கொள்கிறாள். 3 வருடம் காதல், ஊடல், கூடலின்றி இல்லறம் நடத்தி பி.எச்.டி. முடித்து வேலைக்கும் செல்கிறாள். தனது நடன பள்ளியை சம்சாரம் இடைஞ்சலின்றி நடத்தி வருகிறார் விஸ்வநாத். ஆசை யாரைவிட்டது. நிருபமா வேறு புதுக்கனவு காணுகிறாள். திருமணத்தை துறக்க விரும்புகிறாள். மன முறிவிற்கு என்ன காரணம் சொல்வது என குழம்புகிறான். விஸ்வநாத்திடம் ஏதாவது களங்கம் உள்ளதா என்பதை துப்பறிய ஒரு ஆளை அமர்த்துகிறாள். கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாகிறது என்றோடு முடித்து கொண்ட கமல் மீதியை திரையில் நீங்களே பாருங்கள் என்று கூறி முடித்துவிட்டார்.