Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

தங்கர்பச்சனின் அம்மாவின் கைப்பேசியில் இனியா...!

Iniya in Thangar Bachaan film"வாகைசூட வா", "மவுன குரு" போன்ற படங்களில் நடித்த நடிகை இனியா அடுத்தப்படியாக தங்கர்பச்சன் படத்தில் நடிக்கிறார். "அழகி", "சொல்ல மறந்த கதை", "பள்ளிக்கூடம்" போன்ற உணர்வு சார்ந்த படங்களை இயக்கிய தங்கர்பச்சன் களவாடிய பொழுதுகள் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப்படம் முடிந்து வருடங்கள் சில ஓடியும், சில பல காரணங்களால் இன்னும் இப்படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்து வருகிறார். இந்நிலையில் தனது படைப்பாக "அம்மாவின் கைப்பேசி" என்ற படத்தை இயக்குகிறார். இதில் ஹீரோவாக சாந்தனுவும், ஹீரோயினாக இனியாவும் நடிக்கிறார்.

இப்படத்தில் நடிப்பது குறித்து இனியா கூறியுள்ளதாவது, அம்மாவின் கைப்பேசியில், செல்வி எனும் கதாபாத்தரத்தில், சிறிய நகரத்தில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவியாக நடிக்கிறேன். தங்கர்பச்சனின் நிறைய படங்கள‌ை நான் பார்த்து ரசித்து இருக்கிறேன். அவருடைய படங்கள் எனக்கு ‌ரொம்ப பிடிக்கும். அவருடைய படத்தில் நடிக்க எனக்கு அழைப்பு வந்தபோது ரொம்ப ஆச்சரியப்பட்டேன். முன்பு பாரதிராஜா சார் படத்தில் நடிக்க எனக்கு அழைப்பு வந்தபோது நான் எப்படி ஆச்சரியப்பட்டேனோ அதைப்போன்று தான் தங்கர்பச்சன் படத்தில் நடிக்க அழைப்பு வந்தபோதும் உணர்ந்தேன். பாரதிராஜா, தங்கர்பச்சன் போன்ற பெரிய டைரக்டர்களின் படங்களில் நடிக்க நான் கொடுத்து வைத்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

ஜூன் மாதம் முதல்வாரத்தில் "அம்மாவின் கைப்பேசி" படம் ஆரம்பமாகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் தொடங்குகிறது.

Tags »
Thangar Bachaan film, Iniya, heroine, தங்கர்பச்சன் படம், இனியா, ஹீரோயின்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (6)

செந்தில் - Chennai,இந்தியா
2012-06-01 12:39:29 Report Abuse
 செந்தில் எதுக்குடா இந்த மானம் கேட்ட பொலப்பு.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
சரவணன் - TRICHY,இந்தியா
2012-06-01 10:35:44 Report Abuse
 சரவணன் எப்போதும் தமிழ் தமிழ் என்று பேசும் தங்கர்பச்சான், ஏன் தமிழ்நாடு கதாநாயகி கிடைக்கவில்லையா உங்களக்கு?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
raja - London,யுனைடெட் கிங்டம்
2012-06-01 10:35:03 Report Abuse
 raja பாரதி ராஜா படத்ல சான்ச...! அப்ப அம்மணிக்கு வயசு என்ன ஆகுது! இப்பவே கண்ணா கட்டுதே....!
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
முத்துக்குமார் - mudukulathur,இந்தியா
2012-05-31 19:55:44 Report Abuse
 முத்துக்குமார் சினிமா செய்திகளில் கள்ள காதல் பற்றி காண்பிக்க வேண்டாம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ஜெயக்குமார் - Srivi,இந்தியா
2012-05-31 17:58:38 Report Abuse
 ஜெயக்குமார் தங்கர்பச்சன் போன்ற பெரிய டைரக்டர்களின் படங்களில் நடிக்க நான் கொடுத்து வைத்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.### அப்போ காசு வாங்காம ஓசில நடிச்சு கொடு
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in