ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
பொது நிகழ்ச்சிகளில் தான் இசையமைத்த பாடல்களைப் பாடுவோர் தனக்கு ராயல்டி தர வேண்டும் என்று கூறி போர்க்கொடி தூக்கினார். பலரிடம் இருந்து ராயல்டியும் பெறப்பட்டது. இந்த விவகாரம் நீடித்துக் கொண்டே போக, தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமார் தலைமையில் கிளம்பிய தயாரிப்பாளர்கள் சிலர், இளையராஜாவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இளையராஜா படங்களுக்கு இசையமைக்கும்போது பணம் பெற்றுக் கொண்டுதான் இசையமைத்துள்ளார். அதன்பின், அந்தப் பாடல் தொடர்பான அனைத்து உரிமைகளும் தயாரிப்பாளர்களிடம்தான் உள்ளது. எனவே, அந்தப் பாடல்களுக்கு இளையராஜா உரிமை கொண்டாடுவது சட்டவிரோதமான செயல். ஏற்கனவே இளையராஜா ராயல்டியாக பெற்றத் தொகையில், குறைந்தபட்சம் 50 சதவீதத் தொகையை சம்பந்தப்பட்ட படத்தின் தயாரிப்பாளரிடம் கொடுக்க வேண்டும் என்றும், தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சினிமா வட்டாரங்களில் தைரியமாக செயல்பட்ட தயாரிப்பாளர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், நடிகர், இயக்குநர், நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், இளையராஜாவுக்கு எதிராக வழக்குப் போட்ட தயாரிப்பாளர்களை பாராட்டி இருக்கிறார்.
இந்த விஷயத்தில், தயாரிப்பாளர்களின் கோரிக்கை நியாயமானது. ஒரு சில தயாரிப்பாளர்களை கடந்து எல்லா தயாரிப்பாளர்களும் இந்தப் பிரச்னையில் ஒன்று சேர்ந்து நியாயம் கிடைக்க போராட வேண்டும் என எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.