ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
வரும் 21ல் ரிலீசாக இருக்கும் 'அடங்க மறு' படத்தைத் தொடர்ந்து 'தனி ஒருவன்-2' படத்தில் நடிக்க திட்டமிட்டிருக்கிறார் நடிகர் ஜெயம் ரவி. அதற்கான பணிகளில் தீவிரமாக இருக்கும் நடிகர் ஜெயம் ரவி, அவ்வப்போது தனியார் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். அப்படி கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பார்வையாளர்கள் பல்வேறு கேள்விகளை ஜெயம் ரவியிடம் எழுப்பினர். அப்போது ஜெயம் ரவி அளித்த பதில்களின் தொகுப்பு:
எனக்கு எம்.ஜி.ஆர்., என்றால் ரொம்பவும் பிடிக்கும். இப்போதைக்கு அவரது வரலாற்றை யாராவது படமாக்க முயன்றால், அதில், எம்.ஜி.ஆராக நடிக்க நான் தயாராக இருக்கிறேன். எனது முதல் படத்தில் என்னோடு நடித்த நடிகை சதாவை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அதேபோல, நடிகைகள் ஜெனிலியா, அசின், ஸ்ரேயா என பல நடிகைகளும் எனக்கு பிடித்தவர்கள்தான்.
நான் எப்போது ஓட்டுப் போடத் துவங்கி விட்டேனோ, அன்றிலிருந்தே நானும் அரசியலில் களம் இறங்கி விட்டேன் என்றுதான் அர்த்தம். நேரடியாகத்தான் அரசியலில் களம் இறங்க வேண்டும் என்பதில்லை. அரசியலில் நேரடியாக களம் இறங்கித்தான் மக்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. கமலோடு சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்; அதற்கான வாய்ப்பு கிட்டவில்லை.
சினிமாவைப் பொறுத்த வரையில், படம் எடுத்து முடிக்கும் வரையில் சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். சில நேரங்களில் போட்ட பட்ஜெட்டைத் தாண்டி செலவு போய்விடும். அப்போது, ரிலீசுக்குக் கூட கஷ்டப்படுவார்கள். அந்த நேரங்களில் பேசிய சம்பளத்தை குறைத்து வாங்கி, படம் ரிலீசாக உதவிகள் செய்திருக்கிறேன். சினிமாவைப் பொறுத்த வரையில், குடும்பத்தோடு தியேட்டர்களுக்கு வந்து படம் பார்க்கிறவர்கள் ரொம்ப ரொம்ப முக்கியம். அதனால், அவர்கள் முகம் சுளிக்காத அளவுக்கு ஆபாசமான காட்சிகளை படத்தில் வைக்காமல் இருப்பது, வியாபார ரீதியில் முக்கியமான ஒன்று.
இவ்வாறு நடிகர் ஜெயம் ரவி பதில் கூறினார்.