ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் இதுவரை நடக்காத ஒரு விஷயம் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. ஷங்கர் இயக்கிய 2.0 படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் ரஜினி.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்யை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் சர்கார் படத்தை இயக்கிக் கொண்டிருந்தபோதே அவரது அடுத்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருந்தார் ரஜினி. சர்கார் படம் 2018 தீபாவளிக்கு வெளியானது.
அப்படத்துக்காக தொடர்ச்சியாக பணிபுரிந்ததால், சில வாரம் ஓய்வில் இருந்த முருகதாஸ், தற்போது ரஜினி நடிக்கவுள்ள படத்திற்கான முதற்கட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இப்படத்தை முதலில் சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. பிறகு லைகா தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.
லேட்டஸ்ட் தகவலின்படி ஏ.ஆர்.முருகதாஸ் - ரஜினி இணையும் படத்துக்கு இன்னும் தயாரிப்பாளர் முடிவாகவில்லை. நீங்கள் வேலையை ஆரம்பியுங்கள்... தயாரிப்பாளர் யார் என்பதை பிறகு சொல்கிறேன் என்று ஏ.ஆர்.முருகதாஸிடம் சொன்னாராம் ரஜினி.
சரியான தயாரிப்பாளர் கிடைக்காவிட்டால் தானே அந்தப்படத்தை தயாரிக்கலாமா என்ற யோசனையில் இருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். இதற்கிடையில் தான் ரஜினி நடிக்கவுள்ள படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தளபதி படத்துக்குப் பிறகு ரஜினி நடிக்கும் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.