சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, நடிகை அனுஷ்கா சர்மாவை, ஓராண்டுக்கு முன், காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அனுஷ்கா கர்ப்பமாக இருப்பதாகவும், விரைவில் அவருக்கு வாரிசு வரப் போகிறது என்றும், நாலா பக்கமும் செய்திகள் பரப்பப்பட்டன. இந்த செய்திகளை அறிந்ததும், விராட் கோலியை விட, அனுஷ்கா ரொம்பவும் கோபம் அடைந்தார்.
இது குறித்து, அனுஷ்கா கூறியிருப்பதாவது: செய்தி வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்தியாக்க துணிந்து விட்டனர். அப்படி எழுதப்படும் அல்லது பரப்பப்படும் செய்தி, ஓரிரு மாதங்களில் பொய் என நிரூபிக்கப்பட்டு விடும். ஆனாலும், அதைப் பற்றியெல்லாம் கவலையே படாமல், அதே போன்றதொரு வேறொரு செய்தி குறித்து, தகவல் பரப்பத் துவங்கி விடுவர். நான் கர்ப்பமாக இருப்பதாக வெளி வந்த தகவல் உண்மையல்ல. இப்போதைக்கு குழந்தை பெற்றும் எண்ணம் எனக்கு கொஞ்சமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.