சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
பாரம்பரிய நெல் விதைகளைக் காப்பாற்றியவர் திருத்துரைப்பூண்டி, கட்டிமேட்டைச் சேர்ந்த நெல் ஜெயராமன். அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். பலனின்றி சமீபத்தில் மரணம் அடைந்தார்.
நெல் ஜெயராமன் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருந்தபோது, அதை கேள்வி பட்டு, அவரை நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்ததோடு நிதி உதவியும் செய்தவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
விவசாயிகள் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கும் சிவகார்த்திகேயன், கனா என்ற பெயரில் தான் தயாரிக்கும் புதிய படத்தில் விவசாயி ஒருவரை பெருமைப்படுத்தும் விதத்தில் காட்சிகளை அமைத்திருக்கிறார். முருகேசன் என்று அந்த கேரக்டருக்கு பெயரிடப்பட்டுள்ளது. விவசாயி கேரக்டரான அந்த கேரக்டரில் நடிகர் சத்யராஜ் நடித்துள்ளார்.