ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இளம் மலையாள நடிகர் துல்கர் சல்மான். ஓகே கண்மணி, வாயை மூடி பேசவும், நடிகையர் திலகம், உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது இந்திப் படங்களில் நடித்து வருகிறார். இதற்காக அவர் தற்போது மும்பையில் தங்கியிருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு துல்கர் சல்மான் கார் ஓட்டிக்கொண்டே செல்போனில் வீடியோ பார்ப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியானது. இது இணையத்தில் வைரல் ஆனது.
இந்த வீடியோவை மும்பை போலீசார் தங்கள் இணைய தளத்தில் வெளியிட்டு. "இது தவறானது. இதுபோன்று யாரும் செய்யாதீர்கள் உயிருக்கு ஆபத்தாக முடியும். பிரபலமான ஒருவரே இப்படி செய்யலாமா?" என்று குறிப்பிட்டிருந்தனர்.
இதற்கு பதில் அளித்த துல்கர் சல்மான். "அது படப்பிடிப்பு காட்சி. காரை ஓட்டவில்லை. அது டிரக்கில் கட்டப்பட்டிருந்தது. நான் நினைத்தாலும் காரை ஓட்ட முடியாது. ஷாட் இல்லாத இடைவெளியில் செல்போனை பார்த்தேன்" என்று விளக்கம் அளித்தார்.
இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட மும்பை போலீஸ் துல்கரிடம் தனிப்பட்ட முறையில் வருத்தம் தெரிவித்துக் கொண்டது.