கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
சிவ இயக்கும் விஸ்வாசம்' படத்தை தொடர்ந்து, சதுரங்கவேட்டை, 'தீரன் அதிகாரம் ஒன்று' படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கும் படத்தில் நடிக்கிறார் அஜித். அஜித்தின் 59-வது படமாக உருவாகும் இந்த படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது.
சில வருடங்களுக்கு முன் வெளியாகி வெற்றியடைந்த 'பிங்க்' ஹிந்தி படத்தின் ரீ-மேக்காக உருவாகும் இந்த படத்திற்கான நடிகர், நடிகைகளின் தேர்வு நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் முக்கிய வேடத்தில் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் நடிக்க இருக்கிறார்.
அதாவது, கதைப்படி ஒரு பார்ட்டிக்கு செல்லும் டாப்ஸி உட்பட மூன்று பெண்களை, அதே பார்ட்டிக்கு வரும் பெரிய இடத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் பாலியல் தொல்லை கொடுப்பார்கள். அதன் தொடர்ச்சியாய் இந்த பிரச்சனை நீதிமன்றத்துக்கு செல்கிறது! இந்த பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் அந்த மூன்று இளைஞர்களில் ஒருவராகத்தான் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிக்கிறார்.
இது குறித்த எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்றாலும் ஆதிக் ரவிசந்திரன், அஜித் படத்தில் நடிப்பது உறுதி என்றே படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.