ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவின் நவரச நாயகன் கார்த்திக். அலைகள் ஓய்வதில்லையில் தொடங்கி இன்று வரை ஓயாமல் நடித்து வருகிறார். கடந்த பல வருடங்களுக்கு முன்பு கார்த்திக் அரசியலில் குதித்தார். பார்வர்ட் பிளாக் கட்சியில் இணைந்த அவர் அந்தக் காட்சியின் தமிழ் மாநில தலைவராக இருந்தார். பின்பு அதிலிருந்து விலகிக நடாளும் மக்கள் கட்சி என்ற ஒரு கட்சியை தொடங்கினார். பாரதிய ஜனதாவுடன் இணைந்து ஒரு தேர்லில் போட்டியிட்டது அந்த கட்சி. எல்லா இடத்திலும் டெபாசிட் இழந்தது. அதன் பிறகு அரசியலை விட்டு ஒதுங்கி இருந்தார்.
இப்போது கமல், ரஜினி கட்சி ஆரம்பிக்கும் நிலையில் அவர்களுக்கெல்லாம் நான் சீனியர் என்றபடி மனித உரிமை காக்கும் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். அதன் கொடியையும் அறிமுகப்படுத்தினார்.
நேற்று நெல்லையில் நிருபர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
இதுவரை நான் அரசியலில் நேர்மையாக இருந்தேன். பார்வர்ட் பிளாக் கட்சியிலும், நான் தொடங்கிய நாடாளும் மக்கள் கட்சியிலும் இருந்தவர்கள் என் முதுகில் குத்தி விட்டார்கள். அதனால் அந்த கட்சியை கலைத்து விட்டேன். இப்போது மனித உரிமை காக்கும் கட்சியை ஆரம்பித்துள்ளேன். ஒவ்வொரு மனிதனின் உரிமையையும் பாதுகாக்கவே இந்த கட்சியை நான் தொடங்கி உள்ளேன். கட்சியின் முதல் மாநாடு விரைவில் அம்பாசமுத்திரத்தில் நடக்க இருக்கிறது. இதில் கட்சியின் கொள்கை, குறிக்கோள் பற்றிச் சொல்கிறேன். விரைவில் கட்சி சின்னம் அறிவிக்கப்படும் என்றார்.