மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் சர்கார். இப்படத்தில் அரசின் இலவச திட்டங்களை கடுமையாக விமர்சித்ததால் ஆளும் அதிமுக., அரசு எதிர்ப்பு தெரிவித்தது. சில தியேட்டர்கள் முன்பாக போராட்டமும் நடந்தது. இதையடுத்து அந்தக்காட்சிகள் நீக்கப்பட்டு படம் திரையிடப்பட்டது.
இதற்கிடையே, சென்னையை சேர்ந்த தேவராஜன் என்பவர், சர்கார் படத்தில் அரசின் இலவச திட்டங்களை விமர்சித்து அரசுக்கும், மக்களுக்கும் அவதூறை ஏற்படுத்தியிருக்கிறார்கள். எனவே முருகதாஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய குற்றப் பிரிவு போலீசில் புகார் செய்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் தான் கைது செய்யப்படலாம் என்று கருதிய முருகதாஸ், முன் ஜாமீன் பெற்றார். மேலும், முருதாஸ் சர்கார் படத்திற்காக மன்னிப்பு கேட்பதோடு, இனி அப்படி விமர்சிக்க மாட்டேன் என்று உறுதி அளித்தால் வழக்கை முடித்துக் கொள்வதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அதற்கு முருகதாஸ் மறுத்து விட்டார்.
இந்த நிலையில் மத்திய குற்றப் பிரிவு போலீசார், அரசுக்கு எதிராக மக்களை தூண்டியதாக முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் தன் மீது நடவடிக்கை எடுக்க கூடாது கூறி என சென்னை ஐகோர்ட்டில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்தார் முருகதாஸ்.
இந்த வழக்கில் முருகதாஸ் மீது பதியப்பட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணைக்கு 6 வாரம் வரை தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.