ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் சர்கார். இப்படத்தில் அரசின் இலவச திட்டங்களை கடுமையாக விமர்சித்ததால் ஆளும் அதிமுக., அரசு எதிர்ப்பு தெரிவித்தது. சில தியேட்டர்கள் முன்பாக போராட்டமும் நடந்தது. இதையடுத்து அந்தக்காட்சிகள் நீக்கப்பட்டு படம் திரையிடப்பட்டது.
இதற்கிடையே, சென்னையை சேர்ந்த தேவராஜன் என்பவர், சர்கார் படத்தில் அரசின் இலவச திட்டங்களை விமர்சித்து அரசுக்கும், மக்களுக்கும் அவதூறை ஏற்படுத்தியிருக்கிறார்கள். எனவே முருகதாஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய குற்றப் பிரிவு போலீசில் புகார் செய்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் தான் கைது செய்யப்படலாம் என்று கருதிய முருகதாஸ், முன் ஜாமீன் பெற்றார். மேலும், முருதாஸ் சர்கார் படத்திற்காக மன்னிப்பு கேட்பதோடு, இனி அப்படி விமர்சிக்க மாட்டேன் என்று உறுதி அளித்தால் வழக்கை முடித்துக் கொள்வதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அதற்கு முருகதாஸ் மறுத்து விட்டார்.
இந்த நிலையில் மத்திய குற்றப் பிரிவு போலீசார், முருகதாஸ், அரசுக்கு எதிராக மக்களை தூண்டியதாக 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் தன் மீது நடவடிக்கை எடுக்க கூடாது கூறி என சென்னை ஐகோர்ட்டில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்தார் முருகதாஸ். இந்த வழக்கு உடனடியாக மதியம் எடுத்து கொள்ளப்பட்டது.
அப்போது, முருகதாஸ் மீதான எப்.ஐ.ஆர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது. அரசு தரப்பில் அவகாசம் கோரியதை அடுத்து வழக்கை டிச.14ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.