ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சான் ஆண்டோனியோ: காஜா புயல் கோரத் தண்டவமாடிச் சென்ற தமிழ்நாட்டின் பல கிராமங்களில் ஆம்பலாப்பட்டு கிராமமும் ஒன்று. இக்கிராமத்தை பூர்விகமாகக் கொண்ட ஒரு இளைஞர், இக்கிராமத்தின் பேரிழப்பைப் பற்றிக் கூற, அமெரிக்கவில் உள்ள சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் உதவியால், இரண்டாயிரம் டாலர்களுக்கும் மேலாக நிதி அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து அனுப்பவும் திட்டமிட்டுள்ளனர்.
இக்கிராமத்தைச் சேர்ந்தவர் தான், தேசியவிருதும், பல விருதுகளும் பெற்ற சிறந்த படமான, வாகை சூட வா திரைப்படத்தின் இயக்குநர் சற்குணம். இவர் தன் பட வேலைகளை அப்படியே விட்டுவிட்டு, தன் கிராமம் நோக்கி ஓடி வந்தார். துடிப்புடன் செயலாற்றும் இளைஞர்களுடன், தீவிரமாகத் தன்னை இணைத்துக் கொண்டார். பிறருடைய உதவிகளை எதிர்பார்க்காது, அத்தியாவசிய பணிகளை முதலில் துவங்கினர். உடைந்த வீடுகளை சரிப்பார்த்தல், தண்ணீர் தொட்டிகள் சரிசெய்தல், மின்சாரத்தை உயிரூட்ட வேண்டிய நடவடிக்கைகள் என சுறுசுறுப்பாக செயல்படத் துவங்கினர்.
இவர் வெளிநாட்டு நண்பர்களின் உதவியுடன் உள்ளூர் இளைஞர்களுடன் சேர்ந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்க நிதியுதவியும் சற்குணத்திடமே அனுப்பி வைக்கப்பட்டு, முறையாகச் செயல்பட்டு வருகிறது.