ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தாரணி டாக்கீஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கே.துரை வசந்த் இயக்ககும் படம் 'உன்னை பாக்காமலே'. இதில் ஹீரோவாக புதுமுகம் அருண் ஹாசன் நடிக்கிறார். ஹீரோயின்களாக சுகன்யா, செளந்தர்யா ஆகியோர் அறிமுகமாகிறார்கள்.விக்ரம் செல்வா இசையமைக்கும் இப்படத்திற்கு தங்கபாண்டியன் ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி இயக்குனர் கே.துரை வசந்த் கூறியதாவது:
சிட்டி மற்றும் வில்லேஜ் என இரண்டு கதைக்களங்களிலும் உருவாகும் இப்படத்தின் கதை முக்கோண காதல் காதையாகும். சிட்டியில் வாழும் ஹீரோயின், மன அமைதிக்காக கிராமம் ஒன்றுக்கு செல்கிறார். அங்கிருக்கும் ஹீரோ மீது அவர் காதல் வயப்படுகிறார். அதே சமயம், அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு பெண்ணும் ஹீரோவை ஒரு தலையாக காதலிக்கிறார். யாருடைய காதல் உண்மையானது என்பதை சொல்லும் திரைக்கதை, இளைஞர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மூணாறு, மறையூர், தென்காசி ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. என்றார்.