ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அபிஷேக் கபூர் இயக்கத்தில் தோனி பட புகழ் சுசாந்த் சிங், நடிகை சாரா அலிகான் நடிப்பில் வெளியாகி உள்ள படம் கேதர்நாத். 2013ம் ஆண்டு உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை மையமாக வைத்து, அதன் உடன் காதலையும் இணைத்து வெளியாகி உள்ள படம் இது.
இப்படத்திற்கு ஆரம்பம் முதலே எதிர்ப்புகள் கிளம்பின. இந்து மதத்தையும், இந்த மக்களின் நம்பிக்கைக்கு அடையாளமாக இருக்கும் கேதர்நாத்தை அவமதிப்பது போன்று படத்தில் காட்சிகள் உள்ளன, இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்து சேனா அமைப்பின் தலைவர் பிரகாஷ்ராஜ்புத் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அந்த வழக்கை நீதி மன்றம் தள்ளுபடி செய்து விட்டதோடு, வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தது. இப்படம் தொடர்பாக உத்தரகண்ட் மாநிலத்தில் போராட்டங்கள் நடந்தன.
இதனால் படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்த போதும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில், ஹரித்துவார், நைனிடால், டேராடூன், பாவுரி, அல்மோரா, உதம்சிங் நகர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கேதர்நாத் படத்தை வெளியிட அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.