ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்தியத் திரையுலகத்தில் வியக்க வைக்கும் இயக்குனர்களாக பெயரெடுத்தவர்கள் தென்னிந்தியாவைச் சேர்ந்த ஷங்கர், ராஜமவுலி. ஷங்கர் 25 வருடங்களுக்கு முன்னதாகவே தமிழ் சினிமாவை அடுத்த வளர்ச்சியை நோக்கி திருப்பிவிட்டார். ராஜமவுலி 'பாகுபலி' படம் மூலம் 2015ம் ஆண்டில் வேறு பாதையில் திருப்பினார். கடந்த வருடம் 'பாகுபலி 2' மூலம் அந்தப் பாதை இன்னும் பெரிதாக விரிவடைந்தது.
'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களும் புரிந்த சாதனையை 2.0 படம் முறியடிக்கும் என்று பலரும் சொன்னார்கள். ஆனால், 'பாகுபலி 2' படம் புரிந்த சாதனையில் பாதியைக் கூட 2.0 படம் புரியாமல் தத்தளிக்கிறது. திரையுலகில் உள்ள பலரும் படத்தை சரியான தேதியில் வெளியிடாததே இந்த வசூல் தடுமாற்றத்திற்குக் காரணம் என்கிறார்கள்.
ஒன்று படத்தை மூன்று வாரங்கள் முன்னதாக தீபாவளிக்கு வெளியிட்டிருக்க வேண்டும். அல்லது மூன்று வாரங்கள் கழித்து கிறிஸ்துமஸ் விடுமுறையிலாவது வெளியிட்டிருக்க வேண்டும். அப்படி எதுவும் செய்யாமல் அதீத நம்பிக்கையுடன் ரஜினி படம் எப்போது வந்தாலும் வசூலைக் குவிக்கும் என நம்பியதே படம் எதிர்பார்த்த வசூலைத் தராமல் குறைவாகத் தரக் காரணம் என பலரும் குற்றம் சாட்டுகிறார்கள்.
மேலும், தமிழ்நாட்டில் ரஜினிகாந்த் அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்தபின் அது பிடிக்காத பலர் ரஜினிகாந்த் படத்தைப் பார்க்க அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை என்றும் சொல்கிறார்கள். அதோடு, பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து இதற்கு முன் வெளிவந்த 'கபாலி, காலா' படங்கள் சாதி ரீதியிலான பின்புலம் கொண்ட படங்களாக இருந்ததும் ரஜினியின் இமேஜை வெகுவாகக் குறைத்துவிட்டது என்கிறார்கள்.
முதல் வார இறுதியில் பாகுபலி 2 படம் 830 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. ஆனால், 2.0 படம் 400 கோடியைத்தான் வசூலித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 'பாகுபலி' என்ற பிரம்மாண்டத்தின் முன் 2.0 சிட்டி நிமிர்ந்து நிற்கும் என்று பார்த்தால் படத்தின் இறுதியில் வரும் 3.0 மாதிரியாக குட்டியாக அமைந்துவிட்டது. அதேசமயம் படம் அனைத்து தரப்பினருக்கும் லாபத்தை தரும் என்பதே உண்மை.