பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
கேடி படத்தில் தமிழுக்கு வந்தவர் தமன்னா. இப்போதுவரை அவரது மார்க்கெட் ஸ்டெடியாக போய்க்கொண்டிருக்கிறது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் நடித்து வருகிறார். பாகுபலிக்குப் பிறகு தற்போது சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டியிலும் புரட்சிப் பெண்ணாக நடிக்கிறார்.
இதுபற்றி தமன்னா கூறுகையில், தமன்னாவை வித்தியாசமாக நடிக்க வைக்க முடியும் என்பதை முதலில் நிரூபித்தவர் ராஜமவுலி. அதற்கடுத்து இப்போது சுரேந்தர் ரெட்டி. சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் என்னை வித்தியாசான ரோலில் நடிக்க வைத்துள்ளார்.
சிரஞ்சீவியுடன் நடிக்க வேண்டும் என்கிற எனது கனவை நனவாக்கியிருக்கிறது. அதற்காக சுரேந்தர் ரெட்டிக்கு நன்றி சொல்ல வேண்டும். இப்படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து நடித்தது பெருமையாக உள்ளது. படத்தை திரையில் காண, ஒரு ரசிகையாக ஆவலுடன் காத்திருக்கிறேன் என்கிறார்.