ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சினிமாவின் அடுத்தகட்டம் ப்ரைம் வீடியோ என்கிறார்கள். பழைய சினிமா, புதிய சினிமா, குறும்படங்கள், மினி தொடர்கள்கள் என இனி எல்லமே பிரைம் வீடியோவில் வர இருக்கிறது. ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் கால் பதித்த அமேசான் பிரைம் வீடியோ இப்போது தமிழுக்கும் வந்திருக்கிறது.
பாபி சிம்ஹா, பார்வதி நாயர், காயத்ரி சங்கர், காளி வெங்கட் நடித்துள்ள வெள்ள ராஜா என்ற தொடர் வருகிற 7ந் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் வெளிவர இருக்கிறது. இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்து வெளியிடுகிறார். குகன் சென்னியப்பன் இயக்குகிறார். விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். வடசென்னையில் உள்ள ஒரு லாட்ஜில் போதை கடத்தல் கும்பல் ஒன்று பிணை கைதிகளை வைத்துக் கொண்டு மிரட்டுவதும். அவர்களை மீட்பதும் தான் கதை. இதுகுறித்து எஸ்.ஆர்.பிரபு கூறியதாவது:
தமிழில், பிரம்மாண்டமான முறையில், ஒரு தைரியமான கதையை சொல்வதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியும், ஆர்வமும் கொண்டுள்ளோம். எங்களது அனைத்து பணிகளிலும், தரமான பொழுதுபோக்கினை வழங்க நாங்கள் அயராது முயற்சிக்கிறோம். வழக்கம்போல், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நாங்கள் ஆழமாக உருவாக்கியுள்ளோம் மற்றும் ஒரு சிக்கல், மர்மம் நிறைந்த போதை மருந்து உலகம் குறித்து இந்த பிரைம் பிரத்தியேக தொடரை வடிவமைத்துள்ளோம்.
ஆர்வமூட்டும் கதை, நம்பத்தக்க இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் உறுதியான நட்சத்திர பட்டாளத்தைக் கொண்டுள்ள இது, பிரைம் வீடியோ நேயர்களால் பெரிதும் விரும்பப்படும் என்று நம்புகிறோம். இந்த உள்ளுர் கதையை இந்தியாவிலுள்ள நேயர்களுக்கு ஏற்றவாறு மட்டுமின்றி, அமேஸான் பிரைம் வீடியோவில் இணைந்துள்ள அனைத்து சர்வதேச நேயர்ளுக்கும் ஏற்றவாறு வடிவமைத்துள்ளோம். என்கிறார் பிரபு.