ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் அஜீத் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெர்மன் சென்றிருந்தார். ஆளில்லா குட்டி விமான தொழில்நுட்டம் குறித்து அவர் ஆய்வு செய்து வருகிறார். அவசரத் தேவைக்கு மருத்துவ பொருட்களை கொண்டு செல்லும் குட்டி ஆம்புலன்சாக இந்த விமானங்களை பயன்படுத்த வேண்டும் என்பது அவரது நோக்கம். இதற்காக ஜெர்மனியில் உள்ள குட்டி விமான தயாரிப்பு நிறுவனமான வாரியோ நிறுவனத்திற்கு சென்றிருந்தார்.
அங்கு பணிகளை முடித்து விட்டு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு சென்னை திரும்பினார். விமான நிலைய பரிசோதனைகளை முடித்துவிட்டு 1 மணி அளவில் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தார். அப்போது அவரை அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள், விமான நிலையத்திற்கு உறவினர்களை வழி அனுப்ப வந்தவர்கள் அஜீத்தை சுற்றி திரண்டு விட்டனர். செல்பி எடுக்கவும், அவருடன் போட்டோ எடுத்துக் கொள்ளவும், ஆட்டோகிராப் வாங்கவும் முண்டியடித்தனர். அவர்களிடமிருந்து விலகி வர அஜீத் மிகவும் சிரமப்பட்டார். சிலருடன் செல்பி எடுத்துக் கொண்டார், ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார். ஆனாலும் அவரால் அவரது காருக்குச் செல்ல முடியவில்லை.
இதைப்பார்த்த விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்து மத்திய தொழிற்படை போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து அவரை வேறு வழியாக விமான நிலையத்திற்கு வெளியே அழைத்துச் சென்று காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.