ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரஜினி, அக்சய் இணைந்து நடித்து வெளியாகியுள்ள '2.0' படத்தில் அமைச்சராக முக்கிய வேடத்தில் நடித்துள்ளவர் மலையாள நடிகர் கலாபவன் சாஜன். 'த்ரிஷ்யம்' படத்தில் மோகன்லாலை அடித்து உதைக்கும் போலீஸ் கான்ஸ்டபிளாக இவரது அசத்தலான நடிப்பை பார்த்துதான் இந்த கேரக்டருக்கு கலாபவன் சாஜனை தேர்ந்தெடுத்தாராம் ஷங்கர்.
அதுமட்டுமல்ல, 2.0 படத்தின் படபிடிப்பு தேதிகளில் சில மாறுதல்கள் ஏற்பட்டு படப்பிடிப்பை அவப்போது மாற்றி வைத்து நடத்தியுள்ளார் ஷங்கர். அந்தசமயத்தில் கலாபவன் சாஜன் மலையாளத்தில் பிசியாக இருந்ததால் அவரால் தேதிகள் ஒதுக்க முடியாமல் போனது.
ஆனாலும் கலாபவன் சாஜனுக்கு பதிலாக வேறு ஒரு நபரை மாற்றி நடிக்க வைக்காமல், அவர் தான் நடிக்க வேண்டும் என அவருக்காக சில நாட்கள் காத்திருந்து படப்பிடிப்பை ஷங்கர் நடத்தினார் என கலாபவன் சாஜனே சமீபத்தில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.