ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வளர்ந்து வந்த அறிமுக நடிகையான ரியாமிகா வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மியாமிகா ஈரோட்டைச் சேர்ந்தவர், என்ஜினீயரிங் படித்தவர். அவரது சித்தி மகன் பிரகாஷ் என்பவர், துணை இயக்குனராக இருக்கிறார். அவர்தான் உன்னை நடிகை ஆக்குகிறேன் என்று ரியாமிகாவை சென்னைக்கு அழைத்து வந்திருக்கிறார்.
அவரது முயற்சியால் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் படத்தில் அறிமுகமாகி நடித்தார். அதன் பிறகு எக்ஸ் வீடியோ என்ற கவர்ச்சிப் படத்தில் நடித்தார். தற்போது அனுநாகி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த நிலையில்தான் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
ரியாமிகா ஒரு கவர்ச்சிப் படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படத்தில் கூடுதல் கவர்ச்சியாக நடித்திருக்கிறார். அப்படி நடித்தது குறித்து அவரது நண்பர்களும், ஊரில் உள்ள உறவினர்களும் அவரை கேலியும், கிண்டலும் பேசியதாக கூறப்படுகிறது. அதனால் அவர் மனம் உடைந்து காணப்பட்டிருக்கிறார். அதோடு அவர் உடற்பயிற்சிக்கு சென்ற இடத்தில் அங்கு மாஸ்டராக இருந்த தினேஷை காதலித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதுதவிர சினிமா வாய்ப்புக்காக சில புதிய படங்களின் ஆடிசனுக்கு சென்று வந்துள்ளார். அங்கு அவருக்கு ஏதாவது கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கலாம். அது தற்கொலைக்கு தூண்டியிருக்கலாம் என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.