14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம், எக்ஸ் வீடியோ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருப்பவர் ரியாமிகா. சென்னை வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பத்தில் தம்பி பிரகாசுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் தனது படுக்கை அறையில் தூங்கச் சென்றவர் காலை நெடுநேரம் ஆகியும் கதவை திறக்காததால், சந்தேகம் அடைந்த தம்பி பிரகாஷ் கதவை பலமாக தட்டியுள்ளார். அப்படியும் திறக்காதால் ஜன்னல் வழியாக பார்த்தபோது ரியாமிகா தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திரண்டனர். போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வளசரவாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலைக்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரியவில்லை. ரியாமிகா சினிமாவில் பெரிய கனவுகளோடு இருந்தார் என்றும், ஆனால் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.