ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி சலீம் படத்தின் மூலம் நடிகராக மாறினார். சலீம் படம் தொடங்கி 'திமிரு புடிச்சவன்' படம் வரை தான் நடித்த படங்களை தன்னுடைய பேனரிலேயே தயாரித்து வந்தார். படத்தை எடுத்து முடித்த பிறகு தமிழ்நாடு தியேட்டரிகல் உரிமத்தை மொத்தமாக யாராவது ஒரு விநியோகஸ்தரிடம் விற்றுவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
இந்த பாணியில் படம் தயாரித்ததால் லாபம் பார்த்தார். இந்நிலையில் சமீபத்திய அவரது படங்கள் சரிவர போகவில்லை. இதனால் பல படங்களில் நஷ்டம் ஏற்பட்டது. விஜய் ஆண்டனி தயாரிப்பில் அண்மையில் திரைக்கு வந்த திமிரு புடிச்சவன் படத்தை வாங்கிய விநியோகஸ்தருக்கும் நஷ்டம் ஏற்பட்டதால் அதை திருப்பிக் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
எனவே, இனி எந்த படத் தயாரிப்பு வேலைகளிலும், இசை அமைப்பு பணிகளிலும் ஈடுபடப் போவதில்லை என்றும் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்த இருக்கிறேன் என்றும் சமீபத்தில் உறுதிபட கூறியுள்ளார் விஜய் ஆண்டனி. தொடர்ந்து விஜய் ஆண்டனி நான்கு படங்களில் நடிக்க இருக்கிறார். இந்த நான்கு படங்களையும் வேறு வேறு தயாரிப்பாளர்கள் தயாரிக்கிறார்கள்.