ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலரது நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள '2.0' படம் நாளை(நவ., 29) உலகம் முழுவதும் வெளியாகிறது. வழக்கமாக இந்தியத் திரைப்படங்கள் வெளியாகும் தியேட்டர்களை விட மிக அதிகமான தியேட்டர்களில் வெளிநாடுகளில் இப்படம் திரையிடப்படுகிறது. இந்தியாவிலும் தமிழ், தெலுங்கு தவிர ஹிந்தியிலும் வெளியாவதால் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.
இருப்பினும், 2.0 படத்திற்கு எதிர்பார்த்ததை விட முன்பதிவு மிகவும் மந்தமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். முன்பதிவு இணையதளங்களில் சென்று பார்த்தாலும் முதல் நாளில் மட்டும் 90 சதவீத டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் முன்பதிவு முழுவதுமாக முடியவில்லை. 50 முதல் 60 சதவீதம் வரையிலான முன்பதிவுதான் நடந்திருக்கிறது. தமிழ்நாட்டில்தான் இந்த நிலை, ஆனால், தெலுங்கானா, ஆந்திராவில் தமிழை விட கூடுதலான முன்பதிவு நடந்துள்ளது.
தெலுங்குப் படமான 'பாகுபலி 2' படத்தை தமிழ் ரசிகர்கள் வரவேற்று பெரிய வெற்றியைக் கொடுத்தார்கள். ஆனால், தமிழில் 600 கோடி ரூபாய் செலவில் தயாராகியுள்ள படத்திற்கு பெரிய வரவேற்பு இல்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.
படத்திற்கான புரொமோஷன் குறைவாக இருப்பதே இதற்குக் காரணம் என திரையுலகினர் தெரிவிக்கிறார்கள். ரஜினிகாந்த் ஒரு டிவிக்கு மட்டுமே பேட்டி கொடுத்தார். படக்குழுவினரும் அந்த ஒரு டிவிக்குதான் பேட்டி கொடுத்தார்கள். வேறு எந்த டிவியிலும் 2.0 படம் பற்றிய பேட்டிகள் ஒளிபரப்பாகவில்லை.
மேலும், ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாடும் இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் அவருடைய கருத்து கடுமையாக விமர்சிக்கப்பட்டது. மேலும், தற்போது கஜா பாதித்த பகுதிகளை அவர் பார்வையிடாததும் விமர்சிக்கப்படுகிறது. விரைவில் அரசியல் களம் காண உள்ளதாக அறிவிப்பவர் அதற்கான எந்த ஒரு செயலிலும் இறங்கவில்லை என்கிறார்கள்.
படம் நாளை வெளிவந்த பின் நன்றாக இருக்கிறது என்ற கருத்து பரவினால் மட்டுமே படம் நல்ல வசூலைக் கொடுக்கும் என்று திரையுலக வியாபார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.