ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்நாட்டில் நடக்கும் சில முக்கிய விஷயங்களைப் பற்றி எப்போதுமே எதிர்மறையான கருத்துக்களைப் பதிவிடுபவர் தெலுங்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா. அவரது தயாரிப்பில் சித்தார்த்தா இயக்கத்தில் தனஞ்செயா, இர்ரா மோர் நடித்துள்ள 'பைரவ கீதா' படம் நவம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.
நவம்பர் 29ம் தேதி 2.0 படம் தெலுங்கிலும் வெளியாவதால் 'பைரவ கீதா' படத்தைப் பார்க்க ரசிகர்கள் வருவார்களா என்ற சந்தேகம் ராம்கோபால் வர்மாவுக்கு இருக்கிறது. அதனால் முடிந்தவரை 2.0 படத்தைப் பற்றி ஏதாவது குறையாகப் பதிவிட வேண்டும் என்று நினைத்து அந்தப் படத்தைப் பற்றி அடிக்கடி பேசி வருகிறார்.
நேற்று டுவிட்டரில், “ரோபோட் 2.0 படம் ஒரு பெரிய இயக்குனர் சின்னக் குழந்தைகளுக்காக எடுத்துள்ள சினிமா, பைரவ கீதா ஒரு சின்ன இயக்குனர் பெரியவர்களுக்காக எடுத்துள்ள சினிமா” எனக் குறிப்பிட்டுள்ளார்.
2.0 படம் குழந்தைகளுக்கான படம் என அவர் 'டிகிரேட்' செய்ய விரும்புகிறார். இருப்பினும் அதுதான் '2.0' படத்தின் பலம் என்பது ராம்கோபால் வர்மாவுக்குத் தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.