ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த ஆளுமைகளில் முக்கியமானவர் ஏ.பி.நாகராஜன், அவரை நினைத்தால், திருவிளையாடல், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, திருவளர்ச்செல்வர், திருமால் பெருமை என புராண படங்கள் தான் நினைவுக்கு வரும். ஆனால் அவர் சமூக படங்களிலேயே பல புரட்சிகளைச் செய்தவர்.
ஆரம்பத்தில் அவர் நடிகராகத்தான் தன் வாழ்க்கையை துவக்கினார். நால்வர், மாங்கல்யம், நல்ல தங்காள் படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு நான் பெற்ற செல்வம், நல்ல இடத்து சம்பந்தம் படங்களுக்கு வசனம் எழுதினார். சம்பூர்வ ராமாயணம் படத்தில் பரதன் கேரக்டருக்கு இவர் எழுதிய வசனங்கள் தான் இவரை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.
அப்போதெல்லாம் தூய தமிழில் வசனம் பேசிக் கொண்டிருந்தபோது முதன்முறையாக மக்களை பெற்ற மகராசி படத்தில் கோயம்பத்தூர் கொங்கு தமிழில் வசனம் எழுதியவர் ஏ.பி.நாகராஜன். தமிழ் சினிமாவின் முக்கிய அடையாளமாக இருக்கும் தில்லானா மோகனாம்பாள். முதல் சினிமாஸ்கோப் படமான ராஜராஜசோழன் ஆகியவை ஏ.பி.நாகராஜனின் படைப்புதான்.
தொழில்நுட்பம் வளராத காலத்திலேயே நடிகர் திலகம் சிவாஜியை நவராத்திரி படத்தில் 9 வேடங்களில் நடிக்க வைத்து சரித்திரம் படைத்தவர் ஏ.பி.நாகராஜன். அவரிடம் பிற்காலத்தில் எம்.ஜி.ஆர் "சிவாஜிக்கு நவராத்திரி கொடுத்த மாதிரி எனக்கொரு படம் தரமுடியுமா?" என்று கேட்டார். அதற்கு நாகராஜன் அவர், மகா நடிகர், நீங்கள் மாஸ் ஹீரோ. அதனால் உங்களுக்கு வேறு மாதிரி படம் தருகிறேன் என்று சொல்லி இயக்கி படம் தான் நவரத்தினம். இதில் ஒரு எம்.ஜி.ஆர்., 9 ஹீரோயின்கள். ஏ.பி.நாகராஜன் தன்னம்பிக்கையின் சின்னம் என்பதற்கு இது எடுத்துக்காட்டு.