ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 படம் வரும் வியாழக்கிழமை உலகமெங்கிலும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாக உள்ளது. ஹாலிவுட்டிற்கு நிகராக தமிழில் தயாரிக்கப்பட்டுள்ள பிரமாண்ட படம் என்பதால் சினிமா பிரபலங்கள் அனைவருமே இந்த படத்தை பார்க்க ஆவலாக உள்ளனர்.
இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனும் 2.0 படத்தை கோடிக்கணக்கான ரஜினி ரசிகர்களைப் போலவே தானும் முதல்நாளே பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருப்பதாக கூறியிருக்கிறார்.
அதோடு, ஹாலிவுட் படங்களில் மட்டுமே பார்த்து ரசித்து வந்த கிராபிக்ஸ் காட்சிகளை இப்போது தமிழ்ப்படத்திலும் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த படத்தை பார்க்கும்போது எந்த துறையில் இருந்தாலும் தங்கள் துறையில் அடுத்த கட்டடத்துக்கு செல்ல வேண்டும் என்ற உத்வேகம் ஏற்படும். அது எனக்கும் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.