ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
மோகன்லால் நடித்த புலி முருகன் படத்த்திற்கு வசனம் எழுதிய ஆர்.பி.பாலா, அகோரி என்கிற படத்தை எடுத்து முடித்துள்ள நிலையில் இப்போது அடுத்து அனுநாகி படத்தை தயாரிக்கவுள்ளார். மைம் கோபி,ரியாஸ்கான், ரவிகாலே ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். ராட்சசன் பட வில்லன் சரவணன், முக்கிய வில்லனாக நடிக்கிறார். ஆர்.பி. பிலிம்ஸ் ஆர்.பி.பாலாவுடன் ராஜ் பிலிம்ஸ் அறந்தை.கே ராஜகோபால் இணைந்து தயாரிக்கின்றனர். விசாக் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீசாஸ்தா இசை அமைக்கிறார்.
படம் பற்றி ஆர்.பி.பாலா கூறியதாவது: தீமைக்கும், நன்மைக்கும் இடையில் நடக்கும் மோதல் கதை இது அறிவியல் சஸ்பென்ஸ் த்ரில்லர் ரகப்படம் என்றாலும் இதில் நட்பு ,காதல் , அன்பு , காமெடி பக்தி, கிராபிக்ஸ், சண்டை காட்சிகள் என அனைவரையும் கவரும் அம்சங்கள் இருக்கும். நாயகன், நாயகி தேர்வு நடந்து வருகிறது. என்றார்.