வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது |
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும், நிதியுதவிகளையும் தமிழ் நடிகர்கள் சிலர் நேற்று தான் அறிவித்தார்கள். சூர்யா குடும்பத்தினர் சார்பாக 50 லட்ச ரூபாய் நிவாரண உதவி, விஜய் சேதுபதி 25 லட்ச ரூபாய், சிவகார்த்திகேயன் 10 லட்ச ரூபாய் நிதியுதவி மற்றும் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளார்கள்.
மற்ற முன்னணி நடிகர்களும் அவர்களது நிதியுதவிகளை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. நடிகர் விஜய் இன்று அவரது ரசிகர் மன்றத்துத் தலைவர்களின் வங்கிக் கணக்கில் நான்கரை லட்ச ரூபாயை அளித்திருப்பதாக ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் பதிவிட்டு வருகிறார்கள். அதை விஜய்யின் மேனேஜேரும், பிஆர்ஓவும் பகிர்ந்து வருகிறார்கள்.
கேரளா புயல் சமயத்தின் போது கூட விஜய், ரசிகர் மன்றங்கள் மூலமாகத்தான் உதவிகளைச் செய்தார். அது போலவே தற்போதும் ரசிகர் மன்றங்கள் மூலமாகவே உதவி செய்கிறார். மற்ற முன்னணி நடிகர்கள் இனியாவது அறிவிப்பை வெளியிடுவார்களா அல்லது வழக்கம் போல அமைதி காப்பார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.