மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் நடக்கும் விழாவாகும். இதனை அந்த மாநில அரசும் இந்திய அரசின் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகமும் இணைந்து நடத்துகிறது. 49வது சர்வதேச திரைப்பட விழா இன்று கோவாவில் உள்ள பான்ஜி நகரில் தொடங்குகிறது.
அங்குள்ள சியாமா பிரசாத் முகர்ஜி உள் விளையாட்டு அரங்கில் இன்று மாலை 4.30 மணிக்கு நடக்கும் துவக்க விழாவில் கலந்து கொண்டு மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் கர்னல் ராஜ்யவர்தன் ரத்தோர் தொடங்கி வைக்கிறார். கோவா கவர்னர் மிருதுளா சின்ஹா, மத்திய இணை அமைச்சர் ஸ்ரீபாட் யெஸ்ஸோ நாய்க், கோவா பொதுப்பணித்துறை அமைச்சர் ராமகிருஷ்ணா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் உள்ளிட்ட முன்னணி திரை நட்சத்திரங்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள்.
வருகிற 28ந் தேதி வரை 8 நாட்கள் நடைபெறும் இந்தப் பட விழாவில் 68 நாடுகளைச் சேர்ந்த 212 படங்கள் திரையிடப்படுகிறது. இதில் சிறந்த வெளிநாட்டு படங்கள் பிரிவில் 15 படங்களும், சிறந்த இந்திய படங்கள் பிரிவில் 22 படங்களும் போட்டியிடுகிறது. இந்த போட்டியில் பரியேறும் பெருமாள், டூ லெட் உள்ளிட்ட தமிழ் படங்களும் போட்டியிடுகிறது. சிவாஜியின் நினைவாக பராசக்தி படம். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நினைவாக அவர் கடைசியாக நடித்த மாம் என்ற ஹிந்திப் படமும் திரையிடப்படுகிறது.