ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நடிகர் கமல்ஹாசனின் இளையமகள் அக்சரா ஹாசன், விவேகம் படம் மூலம் தமிழில் நடிகையாக களமிறங்கினார். தற்போது, ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கடாரம் கொண்டான் படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் நடிகை அக்சராவின் தனிப்பட்ட படங்கள் இணையதளங்களில் வெளியாகின. இதுதொடர்பாக மும்பை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார் அக்சரா. அந்த படங்கள் ஒரு படப்பிடிப்பின் போட்டோ ஷூட்டுக்காக எடுக்கப்பட்டவை என்றும் அவற்றை வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை வைத்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், அக்சராவின் முன்னாள் காதலரும், மாஜி நடிகை ரதியின் மகனுமான தனுஜ் விர்வானி மீது சந்தேகம் எழுந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் அக்சரா, தனுஜ் விர்வானிக்கு அந்தப்படங்களை அனுப்பியதாகவும், ஆகையால் அவர் வெளியிட்டிருக்கலாம் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
அதேசமயம், தனுஜ் அளித்துள்ள ஒரு பேட்டியில், அக்சரா எனக்கு அந்தப்படங்களை அனுப்பினார். ஆனால் அதை நான் அப்போதை அழித்துவிட்டேன், நான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடவில்லை என கூறியுள்ளார்.